Followers

நட்பின் உலகம்

Tuesday, November 17, 2009

தங்களை அன்புடன் வரவேற்கும் உங்கள் நட்பின் உலகம்

என்னைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை நீங்கள் என்னை உங்கள் உண்மையான நண்பனாக ஏற்று கொண்டால் நானும் உன்ன்மயனவனாக இருப்பேன்.
சந்தோஷத்தில் கைகுலுக்க மறந்தாலும் சோகத்தில் கண் துடைக்க
நிச்சயம் உன் அருகில் இருப்பேன், ஒரு நல்ல தோழனாக........

வெளிச்சம் வந்து வானம் விடிந்தாலும் !
மனதில் ஏனோ ஒரு வருத்தம் !
கனவுகள் யாவும் ஏன் கையில் இருந்தாளும்!
ஏன் எனக்கும் மட்டும் இந்த தடுமாற்றம்
வாழும் வாழ்கையில் ஒரு கேள்விகுறி !
பதில் தெரியாதா கேள்விகளில் !
மனம் தடுமாறும் நேரத்தில் !
இங்கே உன்னதனமான உன் நட்பு என்னும் பந்தத்தில்
நான் என்னை மறந்து கண்கள் மூடி கனவு காண !
என்ன வித்தை செய்தாய் நண்பனே !
நீஙகள் எனக்கு நண்பனாக கிடைக்க .......
```````````````````````````
¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥´¨`♥•.¸¸.•♥
தேவைகளுக்காக மாத்திரம் நட்பு என்றில்லாமல்,
நட்பும் தேவை என்று எண்ணினால் தான் நட்பும் வாழும்

நட்பு வேண்டும்

Thursday, September 10, 2009

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

நட்பு கவிதை

Tuesday, September 1, 2009

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது

கடைசிவரை நான்

Thursday, August 27, 2009

காலங்கள் கடந்தாலும்

கடலலைகள் ஓய்ந்தாலும்

கல் நெஞ்சம் கரைந்தாலும்

கடமைகள் முடிந்தாலும்

கண்களின் ஓரமாய்

காயாத ஈரமாய்

கடைசி வரை நான்

நினைவுகளாய்..............

நண்பனின் மரணம்

Sunday, August 23, 2009

சாதனைகளின் மீது சவாரி செய்யக் காத்திருந்தவன் நீ

உன் திறமைகளின் நிழலிலேயே உலா வந்த ராஜகுமாரர்கள்

நாம் உன் அருகாமையே எம்மை வீரர்களாக்கிவிடும்

அற்புதத்தை எத்தனை முறை பார்த்திருப்போம் எம்

கூடுகளே கூண்டுகள் ஆக்கப்பட்டபோது வேலிகள்

ஒவ்வொன்றாய்த் தீயிலிடப்பட்ட போது - உன்

தோள்களில் துப்பாக்கிகள் குடிவந்தது புதுமையில்லை

உன் இயல்பு அப்படி! கல்லூரிச் சுவர்களில் நீ

கிறுக்கி விட்டுப் போன “ஷே(Che)” பற்றிய குறிப்புகள்

இன்னமும் இருக்கிறது எழுதிய நீ மட்டும் இல்லை!

என் தோழனே!

Thursday, August 20, 2009

சோகமெனில் உன்தோளில்
சாய்ந்து
அழுது தீர்த்துக்கொள்வேன்…
மகிழ்ச்சியெனில் உன்
விரல்கோர்த்து உயிர் மலர சிரித்துக்கொள்வேன்…
உன்னுடனிருக்கும்
ஒவ்வொருநிமிடங்களும்
தாய்மடியில்நிம்மதியாய்
உறங்கும்குழந்தையாய்
நானிருந்தேன்..
தங்கத்தில் வேலியொன்று
என் கழுத்தில் ஏறியதால்
உன்னைப் பிரிந்து இன்று
வெளியூர் செல்கிறேன்…
வழியனுப்ப வந்த
சொந்தங்களின் நடுவே
தோழி என்னை
பிரியவும்மனமில்லாமல்
வேறுவழியும் தெரியாமல்
தவிப்புடன் கன்னம்நனைக்கும்
கண்ணீரைமறைத்தபடியே
மெளனித்துகையசைக்கிறாய் நீ..
உன்னைவிட்டு
நகரத்துவங்குகிறது
இந்த இரயிலும்
என்வாழ்க்கையும்…

எங்கே என் காதலி

Tuesday, August 18, 2009

அம்மா வயிற்றில் சுமந்தாள்
உன் கவிதைகளில்
நிறைந்திருக்கும்
அந்தக் காதலி யாரடா? என்ற‌
தோழி உன் கேள்விகளுக்கு
பதில் சொல்வதற்காகவே
விரைவாகத் தேடுகிறேன்
எங்கோ மறைந்திருக்கும்
என் காதலியை!

நட்பு

உன்னை உணரவைப்பதும் நட்பு
உன்னை உயர்த்துவதும் நட்பு
நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு
உன் நண்பர்களைப் புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...

நட்பின் வெளிப்பாடு

அமைதியான இரவு..
அலைகளின் தாளம்..
படகு மறைவில் காதல் ஜோடிகள்..
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் தோளில் அவள் தலை சாய்ந்து
விசும்பி கொண்டு இருக்கிறாள்..
சமூகம் அவர்களை கேலி செய்தது
கள்ளக்காதல் என்று..
எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணீர்
ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!